கடன் பிரச்சனையில் அரிசி கடை அதிபர் தற்கொலை!
தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ;
தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்தவர் கடற்கரை முத்து மகன் கணேசபெருமாள் (50). இவர் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பகுதியில் MSK அரிசி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நியில் கடன் பிரச்சனை காரணமாக கடந்த 24ம் தேதி தனது கடையில் வைத்து மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். மது போதையில் மயக்க நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த நபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.