மாற்றுத்திறனாளிகளுக்கு பைக் வழங்கிய ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மொத்தம் 1139 பயனாளிகளுக்கு ரூ.46.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்;
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,92,500/-மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரு.1,37,200/- மதிப்பிலான செயற்கை அவயங்களையும், தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் 841 பயனாளிகளுக்கு ரூ.20,47,000/- மதிப்பில் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 79 பயனாளிகளுக்கு ரூ.15,63,000/- மதிப்பில் திருமண நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 12 பயனாளிகளுக்கு ரூ.6,10,000/- மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 147 பயனாளிகளுக்கு ரூ.1,76,400/- மதிப்பில் புதிய ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பில் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.1,65,000/- மதிப்பில் இயற்கைமரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 17 பயனாளிகளுக்கு ரூ.20,400/- மதிப்பில் புதிய ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும் என மொத்தம் 1139 பயனாளிகளுக்கு ரூ.46,71,800/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு மிக நிதி வசூலாக ரூ.5,00,000க்கு மேல் நிதி வசூல் புரிந்த பள்ளிகல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் மேதகு ஆளுநர் அவர்களின் பாராட்டுச்சான்றிதழ்களையும், படைவீரர் கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு மிக நிதி வசூலாக ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை நிதி வசூல் புரிந்த வருவாய்துறை, போக்குவரத்துத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களின் பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சுஜாதா, தொழிலாளர்துறை உதவி ஆணையர் (ச.பா.தி) ஆனந்த் பிரகாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.