கறம்பக்குடி காசிம் கொல்லைபகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது சாகுல் ஹமீது(65), ரகமத்துல்லா(53) ஆகியோர் கடைகளில் குட்கா விற்றது தெரியவந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன், இரண்டு கடைக்கு சீல் வைத்தார்.