*என்.சி.சி.யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது-மதுரை என்.சி.சி குரூப் காமாண்டர் கர்னல் வி.கே.எஸ். செளகான் பேட்டி*

*என்.சி.சி.யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது-மதுரை என்.சி.சி குரூப் காமாண்டர் கர்னல் வி.கே.எஸ். செளகான் பேட்டி*;

Update: 2025-05-27 14:27 GMT
விருதுநகர் டி.என் 28 பட்டாலியன் (என்.சி.சி) பயிற்சி முகாமில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ராணுவ கேண்டினை மதுரை என்.சி.சி குரூப் காமாண்டர் கர்னல் வி.கே.எஸ். செளகான் திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கேண்டினில் வாடிக்கையாளர்கள் அமரும் ஏ.சி காத்திருப்பு அறைகள், குறைந்த விலையில் உணவகத்தை அவர் திறந்து வைத்தார்.முன்னதாக என்சிசியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய என்.சி.சி மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.மேலும் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில், விருதுநகரில் உள்ள ராணுவ கேண்டீன் தற்போது புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேண்டீன் மூலம் ராணுவத்தினர் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் சுமார் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இங்கு புதிதாக காத்திருப்போர் அறையும் குளிர்சாதன கருவிகளோடு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி கேன்டீனும் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இதன் மூலம் சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மதுரை தலைமையகத்தின் கீழ் 11 பட்டாலியன்களில் சுமார் 26 ஆயிரம் என்.சி.சி. மாணவர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,400 மாணவர்கள் உள்ளனர். என்.சி.சி.யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விருதுநகரிலும் கூடுதலாக என்.சி.சி. மாணவர்களை சேர்க்கும் திட்டம் 2ம் கட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளது. என்.சி.சி.யை மேலும் விரிவுபடுத்தவும், கூடுதலான மாணவர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு கட்டமாக இது விரிவுபடுத்தப்படும். ஒரு சில பட்டாலியன்கள் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விருதுநகரில் உள்ள 28வது பட்டாலியனும் அடுத்த கட்டமாக விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Similar News