போடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (84). இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக காச நோயின் அறிகுறி இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். நோயின் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த பெருமாள் நேற்று (மே.27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.