சங்கரன்கோவில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கடி நாட்டு விழா
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கடி நாட்டு விழா;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ரூபாய் 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் தலைமையில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.