சபரிமலைக்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று தரிசனம் செய்ய ரோப் கார் வசதி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய தலைவர தகவல்

சபரிமலைக்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ரோப் கார் வசதி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-05-31 13:10 GMT
அரியலூர், மே.31- அரியலூர் உள்ள தனியார் மண்டபத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் தென் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஜெயராஜ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது சபரிமலைக்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரோப் கார் அமைக்கப்படும் இடம் மத்திய வனத்துறைக்கு சொந்தமாக உள்ளதால் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ஆனால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரோப்கார் அமைக்க தேவைப்படும் இடத்திற்கு பதிலாக மாற்று இடம் மத்திய வனத்துறையிடம் கொடுக்க வேண்டும் என் இந்நிலையில் மத்திய வனத்துறைக்கு கொடுக்க வேண்டிய நிலத்தை கொடுக்க மாநில அரசு தாமதப்படுத்தி வருவதால் சபரிமலைக்கு ரோப் கார் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. எனினும் விரைவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என கூறினார்

Similar News