புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, மாங்கோட்டை கீழ் பாதியை சேர்ந்தவர் சிவகுமார்(38) . இவர் வீரசோழபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மூன்று சீட்டு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து தகவலின் பேரில் விரைந்து வந்த மழையூர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல் 1, ரூ.3,600 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.