ஒரு வயது குழந்தை திடீர் மரணம்

மதுரை மேலூர் அருகே காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-06-02 12:28 GMT
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்த ராஜா, சீதாலட்சுமி தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கடைசி குழந்தை தீரன்( 1) என்பவர் கடும் காய்ச்சல் பாதிப்பால் அவருக்கு நாட்டு மருந்து கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஜூன் 2) குழந்தை உயிரிழந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News