காவேரிப்பட்டிணம் அருகே ஆற்றில் மிதந்த ஆண்சடலம்.
காவேரிப்பட்டிணம் அருகே ஆற்றில் மிதந்த ஆண்சடலம்.;
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணம் அருகே பென்னேஸ்வரமடம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (38) இவர் ராயக்கோட்டை ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 6 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மது அருந்தி வந்துள்ளார் சம்வம் அன்று ஏழுமலையான் கொட்டாய் சாலையில் தென்பெண்ணை ஆற்றில் சிவக்குமாரின் உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் சிவக்குமாரின் உடலை மீட்டு இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.