கோவை: கமல் பொறுப்புடன் பேச வேண்டும் -ராதாகிருஷ்ணன்

கமலஹாசனின் சமீபத்திய கருத்து குறித்து, பேசிய சிபி ராதாகிருஷ்ணன் திரைப்படங்களிலும் பொது வாழ்க்கையிலும் பொறுப்புடன் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.;

Update: 2025-06-06 07:06 GMT
மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, பெங்களூருவில் நடந்த துயரச் சம்பவம் வேதனையளிப்பதாக கூறினார். விளையாட்டில் கட்டுப்பாடு அவசியம் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கமலஹாசனின் சமீபத்திய கருத்து குறித்து, திரைப்படங்களிலும் பொது வாழ்க்கையிலும் பொறுப்புடன் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என கூறுவது தவறானது என்றும், இதுவே கொந்தளிப்பை உருவாக்குகிறது என்றும் தெரிவித்தார். முதல்வரின் ஷா காலூன்ற முடியாது என்ற கருத்து குறித்து,அவர் அரசியல் பேசியுள்ளார், அதற்கான பதிலை அரசியல்வாதிகள் தான் அளிக்க வேண்டும் என்றார். ஜனநாயகம் அனைவருக்கும் வாய்ப்புகள் தரும் அமைப்பு எனவும் கூறினார். புதிய கல்விக் கொள்கை மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகவும், பிற மொழிகளை இழிவுபடுத்த உரிமை எதற்கும் இல்லை என்றும் விளக்கினார். தமிழகத்தில் கல்வி தரம் உயர வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், தமிழர்கள் UPSC உள்ளிட்ட தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Similar News