பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.
சுபமுகூர்த்த நாளையொட்டி பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.;
பரமத்திவேலூர். ஜூன்.6: பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப் பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர் ஜேடர்பாளையம்,கபிலர்மலை, பரமத்தி,பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.50- க்கும்,அரளி கிலோ ரூ.80-க்கும்,ரோஜா கிலோ ரூ.250-க்கும்,பச்சை முல்லை பூ கிலோ ரூ.300-க்கும்,வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.250-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.180 - க்கும்,கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும்,பன்னீர் ரோஸ் கிலோ ரூ.120-க்கும்,ஜாதி மல்லி பூ கிலோ ரூ.500-க்கும்,காக்கட்டான் பூ கிலோ ரூ.500-க்கும்,ஜாதி மல்லி பூ கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.180-க்கும், அரளி கிலோ ரூ.130-க்கும், ரோஜா கிலோ ரூ.400-க்கும், பச்சை முல்லை பூ கிலோ ரூ.500- க்கும்,வெள்ளை முல்லை பூகிலோ ரூ 400-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.240க்கும்,கனகாம்பரம் ரூ.600-க்கும்,பன்னீர் ரோஸ் கிலோ ரூ.180 -க்கும்,ஜாதி மல்லி பூ கிலோ ரூ.700-க்கும் காக்கட்டான்பூகிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. இந்த மாதத்தில் அதிக சுபமுகூர்த் தங்கள் இருப்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.