போடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (36). இவருக்கு தீராத குடி பழக்கம் இருந்து வந்த நிலையில், அதன் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத மனவேதனையில் இருந்து வந்த வெங்கடேசன், நேற்று (ஜூன் 5) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.