உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா நடந்தது, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பேரூராட்சித் தலைவர் அமானுல்லா, செயல் அலுவலர் ரவிசங்கர், துணைத் தலைவர் கலைமகள் தீபக் ஆகியோர் கலந்து கொண்டு, பல வகை மரச் செடிகளை அறிவு சார் மைய வளாகத்தில் நட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.