கோவை: கிணற்றில் தவறி விழுந்த குதிரை-உயிருடன் மீட்பு!

மதுக்கரை பகுதியில் உள்ள 80 அடி ஆழமுள்ள பழமையான கிணற்றில், 30 அடி தண்ணீர் இருந்த நிலையில், ஒரு குதிரை தவறி விழுந்து உயிருக்கு போராடியது.;

Update: 2025-06-08 02:18 GMT
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள ஒரு பழமையான கிணற்றில், சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், குதிரை ஒன்று நேற்று தவறி விழுந்து உயிருக்கு போராடியது. கிணற்றில் கைப்பிடி சுவர் இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்த குதிரை கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினால் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, குதிரையை கயிறுகள் உதவியுடன் கட்டி மேலே இழுத்து பாதுகாப்பாக மீட்டனர். சம்பவ இடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், தீயணைப்பு துறையின் செயல்பாட்டைப் பாராட்டினர். தற்போது குதிரைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் அதை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News