திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் ஹாமீன்புரம் 7வது தெருவில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் படர்ந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் நோய் பரவும் என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.