பசுபதிபாளையத்தில் சிதிலமடைந்த சாக்கடை ஸ்லாப்புகள்.உயிரிழப்பு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

பசுபதிபாளையத்தில் சிதிலமடைந்த சாக்கடை ஸ்லாப்புகள்.உயிர் இழப்பு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.;

Update: 2025-06-08 12:00 GMT
பசுபதிபாளையத்தில் சிதிலமடைந்த சாக்கடை ஸ்லாப்புகள்.உயிரிழப்பு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு பகுதியில் உள்ள பசுபதிபாளையம் மாமன்ற உறுப்பினர் வீட்டின் அருகாமையில் உள்ள சாக்கடையில் ஸ்லாப்புகள் சிதிலமடைந்து விட்டதால் அந்த சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் , இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும் வாடிக்கையாக்கி உள்ளது. பெரிய அளவிலான விபத்து நடப்பதற்கு முன்பாக சாக்கடைக்கான ஸ்லாப்புகளை சீரமைத்து , சாலையை பயன்படுத்தும் வகையில் மாநகராட்சியி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News