பேரிகை அருகே காப்பர் கம்பிகள்-ஆயிலை திருடிய மர்ம நபர்கள்.
பேரிகை அருகே காப்பர் கம்பிகள்-ஆயிலை திருடிய மர்ம நபர்கள்.;
கிருஷ்ணகிரி மவட்டம் பேரிகை அருகே உள்ள சாரல்தொட்டி பகுதியில் டிரான்ஸ் பார்மரில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் 150 லிட்டர் ஆயிலை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் பேரிகை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.