கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த முதியவர் கைது
தாடிக்கொம்பு அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த முதியவர் கைது;
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது காப்பிளியபட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த கருப்பு(60) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.