கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2025-06-09 16:45 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News