அரக்கோணத்தில் சரக்கு ரயில் முனையம் அமைக்கும் பணி தொடக்கம்!

சரக்கு ரயில் முனையம் அமைக்கும் பணி தொடக்கம்!;

Update: 2025-06-13 04:51 GMT
அரக்கோணத்தில் அதிநவீன சரக்கு ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ். ரெயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புதுப் புது திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. முக்கியமாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்களில் சரக்குகளை அதி களவில் கையாள வாய்ப்புள்ள இடங்களில் தனியார் பங்களிப்புடன் புதிய முனையங்கள் அமைக்கப்படுகிறது. அதன்படி அரக்கோணம் ரயில் நிலையம் அருகே என்ஜினீயரிங் ஒர்க் ஷாப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரெயில்வே மற்றும் தனியார் பங்களிப்போடு, அதிநவீன புதிய சரக்கு ரயில் முனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.அதிநவீன ரயில்வே சரக்கு கையாளும் முனையத்தை நிறுவு வதற்கும், இயக்குவதற்கும் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் இங்கு சரக்குகளை ஏற்ற, இறக்க நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க தனி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் சரக்கு முனையத்தில் 2 சரக்கு ரயில்கள் நிற்பதற்கான வசதி, சரக்குகளை கையாள்வதற்கான தளங்கள், நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முனையத்தால் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும் என கூறப்படுகிறது. இந்த முனையம் பயன்பாட்டுக்கு வந் தால் அரக்கோணம், சோளிங்கர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

Similar News