திருநெல்வேலி மாநகர மகாராஜாநகர் ரயில்வே கிராசிங்கில் Y வடிவ மேம்பாலம் அமைக்காததால் ஒரு வழி ரயில்வே மேம்பாலம் அமைத்தும் பயனற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றிற்கு செல்லும் மாணவர்கள், மேலும் பல்வேறு வேலைகளுக்காக டூவீலரில் வருவோர் தினமும் மணிக்கணக்கில் ரயில்வே கேட்டில் காத்திருந்து செல்லும் அவல நிலை உள்ளது.