கணவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி

கருங்கல் போலீசில் புகார்;

Update: 2025-06-19 06:37 GMT
குமரி மாவட்டம் முள்ளங்கினா விளைப்பகுதியை சேர்ந்தவர் பிரபின் மனைவி ஷீலா ஏஞ்சல் (39). பிரவீனுக்கு பழக்கமான ஒருவர் வியட்நாம் நாட்டுக்கு அனுப்புவதாக  ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். ஷீலா ஏஞ்சல் போன் பே  மூலமாக நபரின் வங்கி கணக்கில் ரூ. 10 ஆயிரம் அனுப்பியுள்ளார். மீண்டும் ரூ. 8 ஆயிரம்  வாங்கி உள்ளார். ஆனால் விசா ஏற்பாடு செய்யவில்லை.  சில நாட்களுக்கு முன்பு போனில் சசுற்றுலா விசாவில் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.  இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அந்த நபர் பணத்தை திருப்பி தர முடியாது என கூறியதால்  ஷீலா ஏஞ்சல் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது நான் குமரி மாவட்ட பிஆர்ஓ எனக் கூறி  அந்த நபர் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தார். இது குறித்து கருங்கல் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News