அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை
அரசு தொழிற் பயிற்சி நிலையம் பெரம்பலூர்- 94438 52306, 90479 49366;
பெரம்பலூர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2025 – ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேரவிரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும், ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழிற்நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறியவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி ஆகிய கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- சேர்க்கை கட்டணம், ஒருவருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம்- ரூ.185/- இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம்- ரூ.195/- இணையதளம் வாயிலாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே, 19.06.2025 முதல் நேரடி சேர்க்கை ( Spot Admission ) நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம் பெரம்பலூர்- 94438 52306, 90479 49366 & 63797 64520. முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர்- 94990 55883 & 94990 55884. முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் குன்னம்- 98946 97154 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.