திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்பாக நேற்று இரவு கனரக வாகனம் ஒன்று அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைப்பட்டு அருகே இருந்த மின்கம்பம் சரிந்ததால் மின்சாரம் முற்றிலுமாக தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று போக்குவரத்து சரி செய்யப்பட்டது.