இரவில் ஆய்வு மேற்கொண்ட துணை மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் மண்டலம் பால்கட்டளை பகுதியில் நேற்று இரவு மாநகராட்சி துணை மேயர் ராஜு நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்கள் குடிநீர்,சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டி கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட துணை மேயர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.