மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்ஃ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் ஆடு, மாடு, பன்றி வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பத்திரிக்கைச் செய்தி வெளியிட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, விருதுநகர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். யானைகள் மற்றும்; காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு விரைந்து வழங்கிடவும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய விபரங்களை உடனே தெரிவித்திடவும் வன விலங்குகளை சுட்டு பிடித்திட அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அரசு நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுத்திடுமாறும், வன விலங்குகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பருத்தி கொள்முதலுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு ஆகிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மம்சாபுரத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். கண்மாய்களில் அரசு விதிமுறைகளை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர், நீர்வளத்துறை மற்றும் உதவி இயக்குநர், மீன்வளத்துறை ஆகிய அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். கண்மாய்கள் மற்றும்; நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு பகுதி குடியிருப்பு பகுதிகளாக இருக்கும் விபரப் பட்டியல்களை சமர்ப்பித்திடுமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர், மேல்வைப்பாறு, இராஜபாளையம் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அறிவுறுத்தினார்கள்.