ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி பிளவக்கள் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...*

ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி பிளவக்கள் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...*;

Update: 2025-06-28 13:24 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி பிளவக்கள் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவுக்கள் பெரியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்து பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு "கூமாபட்டிக்கு வாங்க" என்று தங்கப்பாண்டி என்ற நபர் இன்ஸ்டாகிராமில் ரீல் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கூமாபட்டி ஒரு ஐலேண்ட் என்றும் இங்கு உள்ள தண்ணீர் சர்பத் போல் இனிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்லியிருந்தார். இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கூமாபட்டி பகுதி நோக்கி படையெடுக்க தொடங்கினர். இங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தங்கப்பாண்டி ரீல் எடுத்த பிளவக்கள் டேம் பகுதியில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சிலர் டேமின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்தனர்.தற்போது டேமுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து பொதுப்பணித்துறை தடையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ளை நம்பி யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் என்றும் தடையை மீறி உள்ளே நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News