திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

மதுரை அருகே திருமணமாகாத இயக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-07-01 12:59 GMT
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை சின்னக் கண்ணு நகரை சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் சித்தார்த்தன் (25) என்பவர் தனியார் பார்சல் சர்வீசில் வேலை பார்த்து வந்தார். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்து நேற்று (ஜூன்.30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News