சாகச பயிற்சிகளை செய்த தீயணைப்பு வீரர்கள்

மதுரை மேலூர் அருகே தீயணைப்பு வீரர்கள் சாகச பயிற்சிகளை செய்தனர்;

Update: 2025-07-02 06:42 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதம் காலமாக தீயணைப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி நடைபெற்று வந்தது. இன்று பயிற்சி நிறைவு நாளை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மற்றும் அவர்களின் துறை சார்ந்த சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் , பயிற்சி அளித்த தற்காலிக பள்ளியின் துணை முதல்வர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருந்தனர்

Similar News