அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை வருவாய் கிராமத்தில் வணிகவரித்துறை அலுவலகம் கட்டுவதற்காக அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் அளக்க முயன்றனர். அப்போது அந்த நிலம் தங்களுடையது எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.