புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்,ராப்பூசலை சேர்ந்தவர் கதிர்வேல் (52). இவர் ராப்பூசலில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.