நகை பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
திண்டுக்கல் அருகே வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது;
திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி(76) என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2 பவுன் தங்க நகை திருடியது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய செல்வி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியை கைது செய்ய புறநகர் DSP. சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வியை பார்ப்பதற்காக அச்சராஜாக்காப்பட்டி வந்த முக்கிய குற்றவாளி மெய்யப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.