கந்தர்வகோட்டை: வாகனம் மோதி ஒருவர் பலி!

விபத்து செய்திகள்;

Update: 2025-07-09 05:03 GMT
கந்தர்வகோட்டை அருகே உள்ள வளையம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (42). அதே ஊரை சேர்ந்தவர் சாமிநாதன் (52). இவர்கள் இருவரும் பைக்கில் காடவராயன்பட்டி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த இரு வரையும் அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி. வைத்தனர். அங்கு செல்லதுரை உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News