ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம்
அரவக்குறிச்சி மற்றும் கடவூர் ஒன்றிய செயற்குழு கூட்டம்;
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றியச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலாளர் பசுவை பெரு பாரதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆசிரியர் ரமேசு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 4 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராமம் பஞ்சாயத்துகளில் தமிழக அரசு அறிவித்த காலனி என்று சொல்லை அரசு ஆவண பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும், அண்ணா நகர் ஜமீன் மாமரத்துப்பட்டி பகுதியில் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், ஆகஸ்ட்17 அன்று கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் விழாவிற்கு வருகை தரும் கட்சி தலைவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்கம் செலுத்துவது ஆகஸ்ட் 20 நெல்லையில் நடைபெற இருக்கின்றது. அது சமயம் ஒன்றியம் முழுவதும் சுவர் விளம்பரம் ஒட்டுதல் மற்றும் பொதுமக்களை அதிக அளவில் நெல்லைக்கு அழைத்துச் செல்லுதல் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகி முருகன் நன்றியுரை ஆற்றினார். இதேபோல கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய ஆலோசனை கூட்டம் தரகம்பட்டி பசுபதிபாளையத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பசுவை பெரு.பாரதி, தூய்மை தொழிலாளர் அணி மாநில தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசிரியர் ரமேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பூபதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் (எ) செல்வா, செவலூர் முருகேசன், தளிவாசல் முருகேசன், விஜயலட்சுமி, மாமரத்துப்பட்டி முருகேசன், சாலிக்கரை ராஜா, தாமோதரன், சிவா, இன்பசிவம், தமிழன் பன்னீர்செல்வம் (எ) தங்கா தமிழரசன், முருகன், கோபி, பிரவீன்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மாணங்களான 1. கடவூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் உள்ள ஊர்களில் காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கூறிய தமிழக அரசு வெளியிட்ட அரசானையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். 2. எதிர்வரும் ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது என்று தீர்மாணங்கள் நிறைவேறப்பட்டது. 3. கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கடவூர் வட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாத்தூர் கிராமம் பசுபதிபாளையம் பகுதியில் அருந்ததிர் மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் வீட்டிற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று கடவூர் வட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5. எதிர்வரும் ஆகத்து 17 தேதி தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமூர் கிராமம் ஏமூர் புதூரில் அருந்ததியர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் சமூக நீதி காவலர் ஆதித்தமிழர்களின் தலை மகன் அய்யா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் ஆகத்து 20 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க அணி வகுப்பிற்கு கட்சி தலைவர் தலைமையில் கடவூர் ஒன்றியம் முழுவதும் பெரும் திரளாக கலந்து கொள்வதாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.