கரூர் எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம்.
கரூர் எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம்.;
கரூர் எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம். தமிழக முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நிர்வாக வசதிக்காக நேற்று திடீரென இடமாற்றம் செய்தது. இதில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற பெரோஸ் கான் அப்துல்லா -வும் ஒருவராக உள்ளார். மேலும் கரூர் மாவட்டத்திற்கு புதிய எஸ் பி யாக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக வசதிக்காக என கூறப்பட்டாலும் முறையாக தங்கள் பணிகளை செய்யாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பேன் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.