சிவகங்கை அருகே ஆசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பள்ளிக்கு சரிவர வராமல் பாடம் எடுக்காத ஆசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், சுமார் 238 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், அங்கு பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் கணேசன் வகுப்பிற்கு முறையாக வரவில்லை, பாடங்களை நடத்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது