ஆடி முதல் நாள் ஜவுளிக்கடையில் குவிந்த பெண்கள்
காரைக்குடியில் ஆடி முதல் நாளை முன்னிட்டு ஜவுளி கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை சார்பில், ஆடி முதல் தேதி மட்டும் பட்டுப் புடவைகளுக்கு 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி விற்பனை செய்து வருகின்றனர் இதனால் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் அதிகாலையிலே பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து காத்திருந்து தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகளை எடுத்துச் செல்கின்றனர். சுப நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பெண்கள் அதிகம் விரும்பி அணியும் பட்டுப்புடவையினை ஆடி முதல் தேதியில் தள்ளுபடி விற்பனை செய்வது பெண்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதிகாலையிலிருந்தே தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகளை எடுத்து வருகின்றனர். மேலும் தள்ளுபடி விற்பனைக்குக் கதவு திறந்ததும் பெண்கள் ஒருவரை ஒருவர் முந்தி சென்று அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பட்டுப் புடவைகளைத் தேடித் தேடி ஆர்வமாக எடுத்து வருகின்றனர்