நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கனி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் படகு குழாம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.