ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (55). இவர் தேனியில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. நேற்று முன் தினம் வீட்டிற்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. தகவல் அறிந்து வந்த தேனி நகர் காவல் நிலையம் காவல்துறையினர் அவரது வீட்டை உடைத்து பார்த்தபோது இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தேனி நகர் காவல் துறை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.