புதுக்குளத்தில் முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி
முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த பேச்சுமுத்து (60) இவர் இன்று காலையில் கிணற்று அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டா அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அய்யாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.