ஆடி கிருத்திகை முன்னிட்டு அரசம்பட்டி ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு பூஜை.
ஆடி கிருத்திகை முன்னிட்டு அரசம்பட்டி ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு பூஜை.;
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள ஸ்ரீ தென்னீஸ்வரன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பால முருகனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் சந்தனக் காப்பில் பால முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.