இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.;

Update: 2025-07-20 19:34 GMT
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (85). இவா், கடந்த மே 27-ஆம் தேதி காணாமல் போனதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், கல்வாா்பட்டி ஊராட்சி காந்தி நகா் ரங்கமலைப் பகுதியில் சுமாா் 500 மீட்டா் உயரத்தில் முதியவா் ஒருவா் இறந்து எலும்புக்கூடாக கிடப்பதாக கூம்பூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் எலும்புக்கூட்டின் அருகே கிடந்த காவி வேட்டி, துண்டு, வளைவான கைத்தடி, பூச்சி மருந்து புட்டி உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரித்தனா். இதனிடையே, சுக்காம்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமியின் மகன் கோபாலுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கோபால், இறந்தது முத்துச்சாமிதான் என்பதை உறுதிப்படுத்தினாா். இதையடுத்து முத்துசாமியின் எஞ்சிய சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கூம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Similar News