விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிட்ட அறிவிப்பில் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை;
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூலை-20) அவசர தேவைக்காக குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை அறிந்து வாகனங்களை வாங்கவும் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.