சிங்காரபேட்டை: குழந்தைகளுடன் பெண் மாயம் தாய் போலீசில் புகார்.

சிங்காரபேட்டை: குழந்தைகளுடன் பெண் மாயம் தாய் போலீசில் புகார்.;

Update: 2025-07-21 03:56 GMT
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி இந்த தம்பதியனருக்கு 1, மகன், 1, மகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னையால் குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் ஜீவா வசித்து வந்த நிலையில் கடந்த, 16-ஆம் தேதி அன்று இரு குழந்தைகளுடன் வெளியே சென்றார். ஆனால் மீண்டும் ஜீவா வீட்டிற்கு வரவில்லை என்று இதுகுறித்து தனது தாய் சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் போலீசில் கொடுத்தார் அந்த புகாரில், காரிமங்கலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜன்டாக உள்ள ராயக்கோட்டையை சேர்ந்த விஜய்(30) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News