அரசு பள்ளியில் போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசினர் பள்ளியில் போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.;
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள்பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 213-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஜூலை.23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.