தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்;
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். நேற்று தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1 ஆம் தேதி வரை "தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்" என்கிற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 10 உரிமைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார். இன்று திருப்போரூரில் தொடங்கிய நடை பயணம் 100-வது நாளில் தர்மபுரியில் நிறைவு பெறுகிறது. திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நடைபயணத்தை தொடங்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசூரங்களை வழங்கினார். அடுத்ததாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகனார், ஓய்வு பெற்ற வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்கம் தலைவர் வைத்தியநாதன், புரட்சி பாரதம் கொள்கை பரப்புச் செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்டர் பங்கேற்றனர். மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேசன், பாமகவின் வழக்கு மண்டல செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.