போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளில் இன்று போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.;

Update: 2025-07-26 12:11 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் தியாகராசர் மேல்நிலைப் பள்ளிகளில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 214-வது மற்றும் 215-வது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News