சுடுகாட்டுக் அருகே முதியவர் சடலம் மீட்பு

மதுரை சோழவந்தான் அருகே சுடுகாட்டில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.;

Update: 2025-07-27 04:55 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டு நீரேத்தான் கிராமத்தில் சுடுகாடு அருகில் விஷம் குடித்து சுமார் 65 வயதான முதியவர் நேற்று (ஜூலை.26) இறந்து கிடப்பதாக நீரோத்தான் விஏஓ ஜெயபிரகாஷ் என்பவர் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News