காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 65,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-07-27 05:51 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது. இன்று ஜூலை 27 காலை 11மணி நிலவரப்படி வினாடிக்கு 65,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நிர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

Similar News